அமுதா…

குறுங் கதைத் தொடர் – 01


பேரூந்து விரைந்து கொண்டிருந்தது. யன்னலினூடே அழகிய இயற்கைக் காட்சிகள் விரியத் தொடங்கின. பச்சைப் பசேலென்ற தேயிலை மலைத் தொடர்கள், பசும் புல் வெளிகள், நீண்டு வளர்ந்த மரங்கள் என பரந்து விரிந்த இயற்கையை ஊடறுத்து பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.

ஆனால், என் மனம் அதில் லயிக்கவில்லை. வெளியே சூரியனை இருள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. உள்ளே என் மனதை சிந்தனைகள் விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தன.

நான் எனது காதலியைப் பார்ப்பதற்காக ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறேன். காதலி என்று சொல்வதை விட முன்னாள் காதலி என்பதே சரியாக இருக்கும். அன்று என் காதலி, இன்று இன்னொருவனின் காதலி.

அன்றைக்கும் என் காதலி தானா? அதுவும் இல்லை. ஒரு தலைக் காதல்.

(……..)

அமுதா…

குறுங் கதைத் தொடர் – 01

https://paththumpalathum.wordpress.com/2019/03/24/amutha-01/

Leave a comment